Header Ads

கத்தி பட விவகாரம்: நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை!

தமிழ் அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று கத்தி படத்தில் இருந்து தயாரிப்பு நிறுவனமான லைக்கா பெயர் நீக்கப்பட்டுள்ளது என்று நடிகர் விஜய் கூறினார்.

இதுகுறித்து விஜய் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

லைக்கா பெயர்

என்னை நேசிக்கும் அன்பான தமிழக மக்களுக்கும், அன்பு ரசிகர்களுக்கும் வணக்கம்.

சில நாட்களாக சில தமிழ் அமைப்புகள் ‘கத்தி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லைக்கா நிறுவனத்தின் பெயரை விளம்பரங்களில் நீக்க கோரிக்கை வைத்திருந்தனர்.

சுமுக தீர்வு

அவர்களின் வேண்டுகோளை மதித்து படத்தின் விளம்பரங்களில் லைக்கா பெயரை நீக்க தயாரிப்பாளர்கள் ஒத்துக்கொண்டனர். எனவே இந்த பிரச்சினை சுமுகமாக முடிந்து விட்டது.

எனவே எதிர்பார்ப்போடு காத்திருந்த ரசிகர்களும், மக்களும் ‘கத்தி’ திரைப்படத்தை சந்தோஷமாக கண்டு களிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

ஜெயலலிதாவுக்கு நன்றி

‘கத்தி’ திரைப்பாடம் சுமுகமாக வெளிவர எங்களுக்கு ஆதரவு தந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும், தமிழக காவல் துறைக்கும், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களுக்கும், தமிழக அமைப்புகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து லைக்கா பெயரை நீக்கிய தயாரிப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துகள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.

No comments:

Powered by Blogger.