Header Ads

ஐதராபாத்தில் 15 நாட்கள் படமாகும் அஜீத்-கௌதம் மேனன் படம்


கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. இப்படத்தை இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் 15 நாட்கள் படமாக்க திட்டமிட்டுள்ளனர். இந்த படப்பிடிப்பில் அஜீத், அனுஷ்கா, திரிஷா உள்ளிட்டோர் பங்கேற்று நடிக்கவுள்ளனர். 

ஐதராபாத்தில் படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு இறுதிக்கட்டப் பணிகளை தொடங்கவுள்ளனர். அஜீத்தின் 55-வது படமாக உருவாகி வரும் இப்படத்தில் அனுஷ்கா, திரிஷா, விவேக், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். அருண் விஜய் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களை நவம்பரில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். பொங்கலுக்கு படம் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Powered by Blogger.