Header Ads

விஜய் நடிக்கும் கத்தி படத்துக்கு சிக்கல்?

விஜய், சமந்தா ஜோடியாக நடிக்கும் படம் கத்தி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைக்கா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.
இந்த நிலையில் கத்தி படத்தை வெளியிட எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாணவர்கள் முன்னேற்ற முன்னணியை சேர்ந்த இருபது பேர் சவுத் இந்தியன் பிலிம் சேம்பரில் படத்துக்கு எதிராக மனு கொடுத்தனர்.
மனுவில் ‘கத்தி’ படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் ஈழத்தமிழர்களை படுகொலை செய்த சிங்கள அரசுக்கு நெருக்கமாக உள்ளது. எனவே இந்த நிறுவனம் எடுக்கும் ‘கத்தி’ படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது. தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை படத்தின் இணை தயாரிப்பாளராக உள்ள ஐங்கரன் இன்டர்நேஷனலும், டைரக்டர் முருகதாசும் ஏற்கனவே மறுத்துள்ளனர். இலங்கை அரசுடன் லைக்கா நிறுவனத்துக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும், இலங்கை போரால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்தான் லைக்கா நிறுவனத்தை நடத்துகிறார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

No comments:

Powered by Blogger.