Header Ads

உலக கால்பந்து போட்டி: இங்கிலாந்து வீரரகள் தங்கி இருந்த ஓட்டலில் நிர்வாண பெண்

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் பிரேசில் நாட்டில் இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் தங்கியிருந்த ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் பட்டப்பகலில் ஒரு இளம்பெண், தனது அறையிலுள்ள பால்கனியில் முழு நிர்வாணமாக நின்று அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

பிரேசில் நாட்டில் உள்ள ரியோ  நகரில்  ராயல் துலிப்  ஐந்து நட்சத்திர ஓட்டல் உள்ளது. இங்குதான் இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் தங்கியுள்ளனர். இந்த ஓட்டலின் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு அறையுடன் இணைக்கப்பட்டிருந்த பால்கனியில் ஒரு இளம்பெண் முழுநிர்வாணமாக நின்று சாலையில் போவோர் வருவோரை எவ்வித கூச்சமும் இன்றி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

ஒரு இளம்பெண் நிர்வாணமாக நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் அவரை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதைக்கூட அந்த நிர்வாண பெண் கண்டுகொள்ளவில்லை. சிரித்துக்கொண்டே சிறிது நேரத்தில் உள்ளே சென்றுவிட்டார்.  இங்கிலாந்து பத்திரிகைகளில் இந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமூக வலைதளங்களிலும் இந்த புகைப்படங்கள் வெளியாகி பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

No comments:

Powered by Blogger.