Header Ads

விட்டகுறை தொட்டகுறையாய் நயன்தாராவை தொடரும் பிரபுதேவா!

சிம்புவை கண்டதும் காதல் போன்று தொட்டதும் பத்திக்கொண்டார் நயன்தாரா. ஆனால், எவ்வளவு வேகத்தில் அந்த காதல் தோன்றியதோ அதே வேகத்தில் மாயமாகவும் மறைந்து விட்டது. அதனால் இனிமேல் காதலே வேண்டாம் என்று இருந்த நேரத்தில்தான் விஜய்யுடன் வில்லு படத்தில் நடித்தபோது அந்த படத்தை இயக்கிய பிரபுதேவாவுடன் மீண்டும் காதலில் விழுந்தார் நயன்தாரா.

அவருக்கு ஏற்கனவே திருமணமாகி பள்ளியில் படிக்கிற பையன்கள் இருக்கிறார்கள் என்றபோதும், அவருக்கு இரண்டாவது மனைவியாக செல்ல தயாராகிக்கொண்டிருந்தார் நயன். அந்த சமயத்தில் அவர் மீது கொண்ட அதீத காதலால் அவரது பெயரைகூட தனது கையில் பச்சைக்குத்திக்கொண்டார். ஆனால், அந்த அளவுக்கு டீப்பான அவர்களது காதல் திடீரென்று விரிசல் விழுந்தது.

அதனால் வாழ்க்கையே வெறுத்துப்போன நயன்தாரா, பின்னர் ஆன்மீகவாதி போன்று தன்னை மாற்றிக்கொண்டார். எதிலும் ஈடுபாடு காட்டாமல் விரக்தி மனநிலையுடன் காணப்பட்டவர் சமீபகாலமாகத்தான் சகஜமான நிலைக்கு மாறியுள்ளார். இந்த நேரத்தில், விட்டகுறை தொட்டகுறையாய் தன் கையில் ஒட்டிக்கொண்டுள்ள பிரபுதேவாவை அகற்ற முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார் நயன்தாரா.

தற்போது சினிமா ஏரியாக்களில் அவர் தலைகாட்டும்போது அவரது கையில் தெரியும் பிரபுதேவாவைத்தான் அனைவரும் கூர்ந்து கவனிக்கிறார்களாம். இதனால் டென்சனாகும் நயன்தாரா, தன் கையில் இருக்கும் பிரபுதேவாவின் பெயரை இன்னொரு கையால் முடிந்தவரை மறைத்துக்கொள்கிறார்.

No comments:

Powered by Blogger.