Header Ads

திருமணமான 10 நாளில் புதுமாப்பிள்ளையை தவிக்க விட்டு ஓடிய இளம்பெண்

திண்டுக்கல் அருகில் உள்ள ஸ்ரீராமபுரம் கரியக்கவுண்டன்புதூரை சேர்ந்த முத்துச்சாமி மகள் மனோ ஜெயமாலா (வயது19). இவருக்கும் வெள்ளையம்பட்டியை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 8–ந்தேதி திருமணம் நடந்தது. ஜெயமாலா திருமணத்திற்கு முன்பு திருப்பூரில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்று வந்தார். அப்போது அங்கு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆனால் இதையாரிடமும் தெரிவிக்காததால் வேறு வாலிபருடன் திருமணம் செய்து வைத்துவிட்டனர்.

சம்பவத்தன்று ஜெயமாலாவின் தாய் செல்வராணி(45) தனது மகளை பார்க்க வந்தார். அப்போது வீட்டில் இருந்த ஜெயமாலாவை அவரது பழைய காதலன் தொடர்பு கொண்டார். அவர் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வரவே அவருடன் சென்றுவிட்டார். சென்றபிறகு தனது தாய்க்கு போன்செய்த ஜெயமாலா நான் எனக்கு பிடித்தவருடன் செல்கிறேன். என்னை யாரும் தேடவேண்டாம் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதுகுறித்து செல்வராணி ரெட்டியார்சத்திரம் போலீசில் புகார் செய்தார். கடத்தப்பட்ட தனது மகளை மீட்டுத்தரவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

No comments:

Powered by Blogger.