Header Ads

கோடிக்கணக்கானோரை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு மறைந்த குட்டி தேவதை!.. video

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்த குழந்தையின் பெயர் மேடி டிப்பெட். இவளுடைய பெற்றோர் மிக் மற்றும் கெரின் டிப்பெட். 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த காணொளியில் அவளுடைய தந்தை மிக், 'உனக்கு அப்பா பிடிக்குமா, அம்மா பிடிக்குமா?' என்று கேட்கிறார்.

கேள்வியை முடிக்கும் முன்பே மேடி 'அம்மாதான்' என்று பதிலளிக்க... 'நான் உனக்கு பொம்மை வாங்கித் தருகிறேன். திரும்ப சொல்லு.. அப்பா பிடிக்குமா? அம்மா பிடிக்குமா?' என்று கேட்கிறார். இவ்வாறு தன்னைத்தான் பிடிக்கும் என்று குழந்தையை சொல்ல வைப்பதற்காக தந்தை மிக் கையாளும் வித்தைகளும், அதை குழந்தை எப்படி கையாள்கிறது என்பதையும் இந்த காணொளி காட்டுகிறது.

இந்தக் குழந்தையின் மழலை பேச்சும், எக்ஸ்பிரஷன்களும் பார்ப்பவர்களின் மனதை ஈர்க்கின்றன. தந்தையின் அன்புத்தொல்லை தாங்க முடியாமல், இறுதியில் 'அப்பாதான் பிடிக்கும்' என்று சொல்லிவிட்டு, 'சும்மாதான் சொன்னேன். அம்மாதான் எப்பவும் பிடிக்கும்' என்ற ரீதியில் இவள் ஜாலியாகப் பேசுவது கல் நெஞ்சம் கொண்டவர்களையும் கரைத்து விடும்.

மேடி டிப்பெட்டுக்கு ஒரு வயது நிரம்பும் போது எடுக்கப்பட்ட இந்த காணொளி, அவளுடைய தாத்தாவுக்கும், பாட்டிக்கும் குழந்தையை காட்டுவதற்காக ஃபோட்டோ எடுக்கும் போது நடந்த எதேச்சையான உரையாடல். 2012ம் ஆண்டில் வைரலாக இருந்த இந்த காணொளியை இதுவரை சுமார் 1.12 கோடி பேர் பார்த்து அக மகிழ்ந்திருந்திருக்கின்றனர்.

இன்னமும் யூடியூப் மூலமாக கோடிக்கணக்கான பேரை மகிழ்ச்சியில் ஆழ்த்த இருக்கும் இந்த புத்திசாலிக் குழந்தையான மேடி டிப்பேட் இன்று நம்முடன் இல்லை என்பது தான் வேதனையான விஷயம். ஆம், கடந்த பிப்ரவரி மாதம் 18ம் திகதி காலம் சென்று விட்டாள் இந்த மூன்று வயதேயான மேடி.

17 ஆம் திகதி மேடிக்கு ஜலதோஷம் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்திருக்கின்றன. வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு மருத்துவர், சாதாரண ஜலதோஷம் தான், கவலைப்படத் தேவையில்லை என்று சொல்லிவிட மீண்டும் வீட்டுக்கே வந்து விட்டனர்.

ஆனால், நேரம் போக போக ஜலதோஷம் தீவிரமாகவே, இன்னொரு பெரிய மருத்துவமனைக்கு மேடியை கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு சோதனை செய்தபோது இரண்டு வித ஜலதோஷ வைரஸ்கள் மேடியை பாதித்திருந்ததையும், அதில் ஒன்று குழந்தையின் இதயத்தைத் தாக்கிக் கொண்டிருப்பதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். இனி, ஒன்றும் செய்யமுடியாது என்ற சூழ்நிலை. சற்றுநேரத்தில் அவளுடைய தந்தையின் மடியிலேயே அகால மரணம் அடைந்தாள்.

விடயம் கேள்விபட்ட பின்னர் உலகில் இதுவரை மேடியை காணொளியில் மட்டுமே பார்த்த எத்தனையோ பேர், அவளை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறியபடி இருக்கின்றனர் இன்று வரை...

மேடியின் தாயார் கெரின் டிப்பெட் அளித்த பேட்டியில், 'மேடி இந்த உலகில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கக்கூடியவள். ஆனால், அவள் கொடுத்து வைக்கவில்லை போலும். ஆனால், இன்னும் 10 வருடம் கழித்தும் மன உளைச்சலில் இருக்கும் பலர் இந்த காணொளியைப் பார்த்து மகிழ்ச்சியடைவார்கள். அதுதான் மேடி வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தம்' என கண்ணீருடன் கூறியிருக்கிறார்.

மேடிக்காக ஆஸ்திரேலியாவின் நியூகேஸில் பூங்காவில் நடந்த நினைவு தினத்தில் கூட பெற்றோர் விருப்பத்தின்படி புன்னகைகளும், பலூன்களும் நிரம்பிய மகிழ்ச்சியான நாளாகத் தான் கடந்திருக்கிறது.

அடுத்தவர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதில் தான் நாம் வாழும் வாழ்க்கையின் அர்த்தம் இருக்கிறது. இன்று மேடி உலகில் இல்லையென்றாலும், கோடிக்கணக்கானவர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்க காத்திருக்கிறாள்..... நீங்கள் யாரை மகிழ்ச்சியாக வைத்திருக்கப்போகிறீர்கள்?....

No comments:

Powered by Blogger.