Header Ads

என்கிட்டத்தான் பஞ்ச் டயலாக் கேட்பாங்க! சந்தானத்தின் பேச்சினால் எரிச்சலடைந்த ஹீரோக்கள்!!

சிம்பு மூலமாக சினிமாவுக்குள் வந்தவர் சந்தானம். அதையடுத்து ஒவ்வொரு முன்னணி ஹீரோக்களின் படங்களாக கைப்பற்றி நடித்த அவர், ஒரு கட்டத்தில் படங்களின் வியாபாரங்களை தீர்மானிக்கும் முக்கிய காமெடியனாக வளர்ந்தார். இதனால் தோல்விகளில் இருந்து தங்களை தக்க வைத்துக்கொள்ள நினைத்த அத்தனை ஹீரோக்களும் சந்தானத்தின் துணையை நாடினர். அதனால், அவர் கால்சீட் எப்போது கொடுக்கிறாரோ அப்போதுவரை காத்திருந்து நடிக்கவும் தயாரானார்கள். இதைப்பார்த்த சந்தானம், நமக்காக மற்றவர்கள் காத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு நம்முடைய மார்க்கெட் இருக்கிறபோது ஏன் நாமளே ஹீரோவாக நடிக்கக்கூடாது என்று வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோ அவதாரம் எடுத்தார்.

அந்த படத்தின் ரிலீசுக்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த சந்தானம், என்னுடன் நடித்த ஹீரோக்களுக்கெல்லாம் நான்தான் பஞ்ச் டயலாக் கொடுத்தேன். சில நாட்களில் படப்பிடிப்பில் இருப்பவர்கள் அங்கிருந்தபடியே என்னிடம் பஞ்ச் டயலாக் என்ன பேச வேண்டும் என்று கேட்பார்கள். அதையடுத்து, நான் யோசித்து அவர்களுக்கு டயலாக் சொன்ன பிறகுதான் நடிப்பார்கள் என்றார்.

ஆனால், இப்படி ஹீரோக்களே என் தயவில்தான் பஞ்ச் டயலாக் பேசினார்கள் எனறு சந்தானம் ஓப்பனாக பேசியதால், அவருடன் நடித்த சில ஹீரோக்களின் திரைக்குப்பின்னால் நடப்பதை இப்படி மீடியாக்களிடம் போட்டு உடைத்து விட்டாரே என்று சந்தானத்தின் மீது காண்டாகி விட்டார்களாம். அந்த கோபத்தில் சில ஹீரோக்கள் இன்னமும் சந்தானத்திடம் முகம் கொடுத்தே பேசாமல் இருக்கிறார்களாம்.

No comments:

Powered by Blogger.