Header Ads

தயாரிப்பாளருடன் பிரபுதேவா திடீர் மோதல் -

கிளைமாக்ஸ் காட்சி படமாக்குவது தொடர்பாக தயாரிப்பாளர் , பிரபு தேவாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பிரபு தேவா இயக்கும் இந்தி படம் ஆக்ஷன் ஜாக்சன். அஜய் தேவ்கன் ஹீரோ. சர்தார் ஹாசன் தயாரிக்கிறார். சோனாக்ஷி சின்ஹா, யாமி கவுதம் ஹீரோயின்கள். இதன் பெரும்பகுதி ஷூட்டிங் முடிந்தது. கிளைமாக்ஸ் படமாக்க வேண்டி உள்ளது. ஜூன் மாதம் இதற்கான ஷூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கிடையில் ஹீரோ அஜய் தேவ்கன் சிங்கம் ரிட்டர்ன்ஸ் என்ற இந்தி படத்தில் நடித்து வருவதால் பிரபுதேவா படத்துக்கு கால்ஷீட் ஒதுக்க முடியாத நிலை உள்ளது. இதையடுத்து கிளைமாக்ஸ் காட்சிக்கான ஷூட்டிங்கை ஜூலை மாதத்துக்கு தள்ளி வைத்த பிரபுதேவா, அதற்கான ஷூட்டிங்கை மும்பைக்கு பதிலாக ஐதராபாத்தில் நடத்த முடிவு செய்தார். இதற்கு தயாரிப்பாளர் சர்தார் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். 

மும்பையிலேயே கிளைமாக்ஸை படமாக்க வேண்டும் என்று கூறி வருகிறார். இதில் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டிருப்பதால் ஷூட்டிங் ஷெட்டியூல்பற்றி இறுதி செய்யப்படாமல் உள்ளது. இது குறித்து பிரபுதேவா கூறும்போது, ஷூட்டிங்கை ஐதராபாத்துக்கு மாற்றுவதை தவிர வேறுவழி தெரியவில்லை. அஜய் தேவ்கன் மற்றொரு படத்தில் பிஸியாக இருக்கிறார். ஆனால் ஆக்ஷன் ஜாக்சன் அவருக்கு இதுவரை இல்லாத அளவுக்கு மாறுபட்ட ஆக்ஷன் படமாக அமையும். இடம்மாற்றி கிளைமாக்ஸ் ஷூட்டிங் நடத்துவது சம்பந்தமாக சுதுக முடிவு ஏற்படும் என்றார். 

No comments:

Powered by Blogger.