ஸ்ருதிஹாசனின் புகார் எதிரொலி! போட்டோகிராபர்களிடம் ஆந்திர போலீசார் துருவி துருவி விசாரணை!!
சமீபகாலமாக தெலுங்கு, இந்தி படங்களில் படுகவர்ச்சியாக நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன், அதிலும் சில இந்தி படங்களில் படு ஆபாசமாகவும் நடித்து வருகிறார். இதனால், பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி சுனாமிகளாக வீசிக்கொண்டிருந்த மெகா நடிகைகளே ஸ்ருதிஹாசனின் அதிரடியை தாங்கிக்கொள்ள முடியாமல், ஓரமாக ஒதுங்கி நிற்கின்றனர். அந்த அளவுக்கு படத்துக்குப்படம் போட்டுத்தாக்கி வருகிறார் ஸ்ருதி.
இநத நிலையில், தெலுங்கில் அவர் நடித்த ஏவடு படத்திலும் கவர்ச்சிக்கு எந்தவித பஞ்சமும் வைக்காமல் வாரி வழங்கியிருந்தார் ஸ்ருதி. ஆனால், சில காட்சிகளில் ஓவர் டோஸ் கொடுத்து விட்டாராம். படமான பிறகு அதை பார்த்த ஸ்ருதிக்கு ஆபாசமாகி விட்டதைக்கண்டு பலத்த அதிர்ச்சியாம். அதனால், அந்த காட்சிகளை படத்தில் வைக்க வேண்டாம் என்று சொல்லி வேறு உடையணிந்து பின்னர் நடித்துக்கொடுத்தாராம்.
ஆனால், படம் வெளியான பிறகு இப்போது அவர் ஆபாசமாக நடித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி விட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ருதிஹாசன், அப்பட தயாரிப்பாளர் மீது ஆந்திர போலீசில் புகார் செய்தார். இதையடுத்து நடந்த விசாரணையில் தனக்கு எதுவும் தெரியாது என்று தயாரிப்பாளர் தில்ராஜூ கூறி விட்டாராம்.
அதனால் இப்போது அப்படத்தில் பணியாற்றிய போட்டோகிராபர்களை அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்களாம். ஆனாலும் இன்னும் இணையதளங்களில் வெளியிட்டவர் யார் என்பது தெரியவில்லையாம். ஆனால், இந்த பிரச்னை காரணமாக, ஆந்திர சினமாவில் தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி, போட்டோகிராபர் உளளிட்டோருக்கும் ஸ்ருதிஹாசன் மீது பலத்த அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் அவர் அதை கண்டுகொள்ளவில்லையாம். அந்த குற்றவாளியை கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று போலீசாரை கேட்டுக்கொண்டு வருகிறாராம்.
No comments: