அஜீத்-விஜய் இணைந்து நடிக்கும் ‘பொன்னியின் செல்வன்’. ஷங்கர் இயக்குகிறார்
அஜீத் மற்றும் விஜய் இணைந்து நடித்த ஒரே படம் ராஜாவின் பார்வையிலே. இந்த படம் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியானது. இருவருமே அப்போது மாஸ் நடிகர்களாக இல்லை. அதனால் அஜீத்,விஜய்யை ஒரே படத்தில் நடிக்க வைப்பதில் பெரிய சிக்கல்கள் எதுவும் அப்போது வரவில்லை.
ஆனால் அதன்பின்னர் இருவருமே பெரிய பெரிய ஹிட் படங்கள் கொடுத்த பின்னர், இருவரும் சேர்ந்து நடிப்பது என்பது நடக்கவே நடக்காது என்றுதான் கோலிவுட் நினைத்தது. ஆனால் செய்ய முடியாதது எதையும் செய்து காட்டுவதுதான் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் திறமை ஆயிற்றே. இருவரையும் இணைத்து ஒரு படம் இயக்க ஷங்கர் முன்வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்க முன்வந்துள்ளார். இவர்கள் இருவரும் நடிக்கும் படத்தின் மூலக்கதை ‘பொன்னியின் செல்வன்’ கதைதான் என்கிறது கோலிவுட் வட்டாரம். இரண்டு சமமான பாத்திரம் கொண்ட கதைதான் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன். அந்த கதையை தற்போதைய காலகட்டத்திற்கு மாற்றி திரைக்கதை அமைக்க இருக்கிறார் ஷங்கர்.
ஷங்கர் தற்போது “ஐ”படத்தின் இறுதிகட்ட வேலையில் இருப்பதால், வரும் மே மாதத்திற்கு பிறகு இந்த படம் குறித்த முறையான அறிவிப்பை பத்திரிகையாளர்களுக்கு தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
No comments: