Header Ads

கறுப்பாக இருந்த கணவரை தூங்கும் போது தீ வைத்து கொளுத்திய மனைவி கைது

கணவர் கறுப்பு நிறமாக இருந்ததால் அவரை பிடிக்காத மனைவி தூங்கும் போது தீ வைத்து கொளுத்தியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் பிண்ட் மாவட்டத்தை சேர்ந்த பெண் சாமிலி தேவி(வயது 24). அவரது கணவர் ஜாக்ராம் ராவுத். ஜாக்ராம் மிகவும் கறுப்பு நிறமாக இருந்துள்ளார். இதனால் அவரை சாமிலி தேவிக்கு பிடிக்கவில்லை. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தூங்கியபோது ஜாக்ராம் மீது சாமிலி மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டார். தீ வைத்து விட்டு அங்கியிருந்து சென்றுவிட்டார். இதனையடுத்து அவரது சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலினின்றி பலியாகினார்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜாக்ராம் கறுப்பாக இருந்ததால் அவரை சாமிலிக்கு திருமணத்திற்கு முன்னேயே பிடிக்கவில்லை என்றும் சாமிலி தேவியை அவரது பெற்றோர்கள் வற்புறுத்தி திருமணத்திற்கு சம்திக்க வைத்தனர் என்றும் ஜாக்ராம் ராவுத்தின் பெற்றோர்கள் போலிசிடம் தெரிவித்துள்ளனர். மேலும், கறுப்பாக இருந்த ஜாக்ராமை பிடிக்காததால் சாமிலி அவரை தீ வைத்து கொளுத்தும் நிலைக்கு சென்றுள்ளார் என்று அவர்கள் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.  

சாமிலி, மற்றவர்கள் தனது கணவரை கறுப்பாக உள்ளார் என்று கிண்டல் செய்த போது அதனை அவமானமாக எடுத்துள்ளார். நிறத்தை பொருந்தவில்லை ஜாக்ராம் தனக்கு சரியான ஜோடியில்லை என்றும் ஜாக்ராமால் தனக்கு ஆடம்பரமான வாழ்க்கையை தரமுடியாது என்றும் சாமிலி நினைத்துள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணையின் போது சாமிலியை போலீசார் கைது செய்துள்ளனர்.  இறப்பதற்கு முன்னதாக ஜாக்ராம் தனது மனைவிதான் சாவுக்கு காரணம் என்று கூறியுள்ளார்.  சாமிலி மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Powered by Blogger.