கலைந்துபோன பிரேம்ஜியின் கனவு!
கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜி. அவரது அண்ணன் வெங்கட்பிரபு இயக்கும் படங்களில் எல்லாம் காமெடியனாக நடித்து வந்தார். சென்னை 600028 தொடங்கி சில படங்களில் கூட்டத்தோடு கூட்டமாக தன் தம்பியை நடிக்க வைத்தார் வெங்கட்பிரபு. அதன் பிறகு மங்காத்தா, பிரியாணி படங்களில் பிரேம்ஜிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார். அப்படங்களில் பிரேம்ஜிக்குக் கிடைத்த பப்ளிசிட்டி காரணமாக, மாங்கா என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு அவரைத்தேடி வந்தது.
இந்தப் படத்தின் கதாநாயகன் மட்டுமல்ல, இசையமைப்பாளரும் பிரேம்ஜிதான். மாங்கா படத்தை நம்பி இனி காமெடியனாக நடிக்க மாட்டேன், ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார் பிரேம்ஜி. இதற்கிடையில் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றநிலையில், மாங்கா படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார்கள். மாங்கா படத்தின் மூலம் ஹீரோவாக நிலைபெறலாம் என்ற கனவு காய்ந்துபோனதால் மறுபடி காமெடியனாக நடிக்க முடிவு செய்திருக்கிறாராம் பிரேம்ஜி.
No comments: