Header Ads

விருது வாங்கப்போவது யாரு...?

கோல்ட் பிஷ் படம் விருது வாங்கினாலும் வாங்குச்சு. அது ஒரு கோல்ட் வாரையும் ஆரம்பிச்சி வச்சிருக்கு. படத்தோட கதை கேட்டு பிடித்து "இந்த படம் ஓடலேன்னாலும் பரவாயில்லை. எனக்கு நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை இந்த படத்தை நான் தயாரிக்கிறேன்"னு சொல்லி தயாரிச்சவர் ஆயிரம் வாரணங்களை காக்க காக்க என்று காக்கும் இயக்குனர். படம் முடிஞ்சதும் பல்வேறு நிதி சிக்கல்கள்ல மாட்டி ரிலீஸ் பண்ண முடியாம தவிச்சபோது படத்தை அவுட் ரேட்டுக்கு வாங்கி ரிலீஸ் பண்ணினவரு இன்னொருத்தர். இப்போ படத்தோட தயாரிப்பாளர் யாருங்றது பிரச்னை.

ஜனாதிபதி கையால விருதை வாங்கப்போறவரு யாரு? ஆயிரம் வாரணம் வச்சிருக்கிறவரா? படத்தை வாங்கி ரிலீஸ் பண்ணினவரா?. இதுல நடுநிலைமையோடு இருக்க வேண்டிய கோல்ட் பிஷ் டைரக்டர் படத்தை வாங்கி ரிலீஸ் பண்ணினவர்தான் புரட்யூசர் அவர்தான் விருதை வாங்கணும்னு சொல்றாராம். காரணம் தமிழ் கற்ற இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிச்சிக்கிட்டிருக்கவரு அவர்தானே. இப்போ பிரச்னை தயாரிப்பு சங்கத்துக்கும், இயக்குனர் சங்கத்துக்கும் போயிருக்கு.

No comments:

Powered by Blogger.