Header Ads

பேஸ்புக்கில் பக்கத்துவிட்டு பெண்ணை மார்பிங் செய்து ஆபாசபடம், வாலிபருக்கு சிறை

பக்கத்துவிட்டு பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து பேஸ்புக்கில் படத்தை பதிவு செய்த வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து, தனது பெயர் மற்றும் முகவரியுடன் மர்ம நபர் ஒருவர் போலியாக பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வருகிறார் என்று கூறியிருந்தார். இதனையடுத்து அம்மாநில சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பேஸ்புக் கணக்கை பயன்படுத்திய ஐ.பி. எண்ணை வைத்து விசாரித்து பெண்ணின் பக்கத்துவிட்டு நபரை பிடித்து கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை போபால் கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது பேஸ்புக்கில் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டதற்காக வாலிபருக்கு கோர்ட்டு 3 வருடம் சிறை தண்டனை விதித்தது. மேலும், ரூ. 22 ஆயிரத்தை சைபர் கிராம் படைக்கு அபராதமாக கொடுக்க உத்தரவிட்டது.

No comments:

Powered by Blogger.