Header Ads

ஆங்கில படத்துக்கு இணையாக உருவாகியுள்ள தாவணிக் காற்று

இயக்குனர் வி.ஆர்.பி.மனோகர் இயக்கத்தில் சஸ்பென்ஸ், திரில்லர் படமாக உருவாகி வரும் மே மாதம் முதல் தேதியில் வெளிவர காத்திருக்கும் படம் ‘தாவணிக் காற்று’. இப்படத்தின் கதாநாயகனாக தமிழ், கதாநாயகியாக ஆராத்யா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், முரளி, ரேகா, சுரேஷ், ரவிக்குமார், ஷோகிப், பேபி ஐஸ்வர்யா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இவர்களுடன் இயக்குனர் வி.ஆர்.பி.மனோகரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

இப்படத்தை பற்றி இயக்குனர் கூறும்போது, இன்றைய கால சினிமா ரசிகர்களை கவரும்படியான ஒரு சஸ்பென்ஸ், திரில்லரை படமாக இயக்கியிருக்கிறேன். இப்படம் இயல்பான தமிழ் படங்களைப் போல் அல்லாமல் ஆங்கிலப் படத்துக்கு இணையாக இருக்கும். 

குறைவான கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து தெளிவான திரைக்கதை அமைத்து படமாக்கியிருக்கிறோம். படம் பார்ப்பவர்களுக்கு எந்தவொரு இடத்திலும் சலிப்பு ஏற்படாதவாறு விறுவிறுப்பான படமாக இருக்கும். 

இப்படத்தின் படப்பிடிப்பை குற்றாலத்தில் இதுவரை எந்த படப்பிடிப்பும் நடைபெறாத இடத்தில் பாடல்கள் காட்சிகளையும், பிற காட்சிகளையும் படமாக்கியுள்ளோம். கிளைமாக்ஸ் காட்சிக்காக சென்னையில் உள்ள ஒரு பங்களா ஒன்றுக்கு முழுமையாக பெயிண்ட் அடித்து, புத்தம் புதிய தோற்றம் கொண்டு எடுக்கப்பட்ட காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 

நாயகி ஆராத்யாவிற்கு இது முதல்படமாக இருந்தாலும் மிக அற்புதமாக நடிப்புத் திறமையை வெளியிப்படுத்தியிருக்கிறார். நாயகனுக்கு இந்த படம் நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும். மிக குறுகியகால தயாரிப்பான இப்படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி வெளிவரவிருக்கிறது. 

இவ்வாறு அவர் கூறினார். 

இப்படத்துக்கு உதயன் என்பவர் இசையமைக்கிறார். முத்ரா ஒளிப்பதிவை கவனிக்கிறார். ஸ்டுடியோ சந்தோஷ் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு வசனம் மற்றும் பாடல்களை இயக்குனர் வி.ஆர்.பி.மனோகரே எழுதியுள்ளார். 

No comments:

Powered by Blogger.