Header Ads

ஐஸ்வர்யாராய் மீண்டும் கர்ப்பம்?

ஐஸ்வர்யாராய்க்கும் அபிஷேக்பச்சனுக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் முடிந்துள்ளது. சமீபத்தில் இவர்கள் தங்கள் திருமண நாளை கொண்டாடினார்கள். 

ஐஸ்வர்யாராய்க்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஆரத்யா என பெயரிட்டனர். குழந்தை பிறந்த பிறகு ஐஸ்வர்யாராய் சினிமாவில் நடிக்கவில்லை. 

மீண்டும் நடிக்கும்படி கேட்டு நிறைய இயக்குனர்கள் கதைகளுடன் அணுகினர். எதையும் ஏற்காமல் இருந்தார். மணிரத்னம் தெலுங்கு, தமிழில் எடுக்கும் படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்க போவதாக சமீபத்தில் செய்திகள் வந்தன. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தார்கள். 

இந்த நிலையில்தான் அவர் மீண்டும் கர்ப்பமாகி இருப்பதாக கூறப்படுகிறது. மும்பையில் ஐஸ்வர்யாராயும், அபிஷேக்பச்சனும் பாராளுமன்ற தேர்தலுக்காக ஓட்டு போட வந்தனர். அப்போது ஐஸ்வர்யாராய் வயிறு பெரியதாக இருந்தது. எடையும் கூடியிருந்தது. இதன் மூலம் அவர் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Powered by Blogger.