Header Ads

படுக்கை அறை காட்சியை வெளியிடுவேன் என மிரட்டி விவாகரத்து கேட்கிறார்’’ கணவர் மீது போலீசில் பெண் புகார்

படுக்கை அறை காட்சிகளை வெளியிடுவேன் என மிரட்டி, எனது கணவர் விவாகரத்து கேட்பதாக பெண் ஒருவர் போலீசில் பரபரப்பான புகார் அளித்தார்.

பெண் புகார்

தென் மும்பை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று வி.ஆர். ரோடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:–

நானும், எனது கணவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறோம். இந்தநிலையில் எனது கணவர் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நான் விவாகரத்துக்கு சம்மதிக்கவில்லை. திருமணத்திற்கு முன்பு ஒரு முறை என் கணவர் என்னை ஜூகுவில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்றார். அங்கு அவர் என்னை, அவரின் நண்பருடன் உறவு கொள்ள வைத்தார். படுக்கையை பகிர்ந்து கொண்டால் தான் என்னை திருமணம் செய்து கொள்வேன் என்று மிரட்டினார். மேலும் என் கணவரும் என்னை பலாத்காரம் செய்தார்.

மிரட்டல்

அந்த நிகழ்வுகளை வேறு ஒருவர் மூலம் ரகசியமாக படம் எடுத்த அவர், தற்போது அவருக்கு விவாகரத்து கொடுக்காவிட்டால் அந்த படங்களை வெளியிடுவேன் என கூறி என்னை மிரட்டுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த புகார் குறித்து வி.பி. ரோடு போலீசார் பெண்ணின் கணவர், அவரது நண்பர் மற்றும் ரகசியமாக புகைப்படம் எடுத்த நபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்கள் இந்த வழக்கை மேல் விசாரணைக்காக ஜூகு போலீசாருக்கு மாற்றி உள்ளனர்.

No comments:

Powered by Blogger.