Header Ads

அமலாபால் -ஆர்யா பற்றி கிசு கிசு பரப்பிய பார்த்திபன்..

ஆர்யா, சிம்பு, விஷால் போன்றவர்கள் சக ஹீரோயின்களுடன் இணைத்து பேசப்படுகின்றனர்.  இவர்களில் முதலிடத்தில இருப்பவர் ஆர்யா. நயன்தாரா, அனுஷ்கா, எமி ஜாக்ஸன், டாப்ஸி என தன்னுடன் நடித்த பெரும்பாலான ஹீரோயின்களுடன் இவர் ரொமான்ஸ் செய்கிறார் என்ற கிசுகிசு வெளியான வண்ணம் உள்ளது. அடுத்து அமலா பாலுடன் இணைத்து இவர் தற்போது கிசுகிசுவில் சிக்கி உள்ளார். ஏற்கனவே இந்த ஜோடி வேட்டை என்ற படத்தில் இணைந்து நடித்தது. அப்போது நடந்த பட விளம்பர நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இருவரும் ஒருவரையொருவர் கலாய்த்த வண்ணம் இருந்தனர். தற்போது இணையதளத்தில், 2வது முறையாக அமலா பாலை மணக்கும் ஆர்யா என்ற தலைப்பில் அமலாபால் கழுத்தில் ஆர்யா தாலி கட்டுவதுபோல் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த கிசுகிசுவுக்கு சொந்தக்காரர் பார்த்திபன்தானாம். கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தை பார்த்திபன் இயக்கி வருகிறார். இதில் கவுரவ வேடத்தில் பிரகாஷ்ராஜ், அமலாபால், ஆர்யா, விஜய் சேதுபதி, நஸ்ரியா போன்றவர்கள் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்துக்கு அமலா பால் கழுத்தில் ஆர்யா தாலி கட்டும் காட்சியை படமாக்கினார். 

அந்த படம்தான் ஆர்யா-அமலா பால் திடீர் டும் டும் கிசுகிசுவுக்கு காரணம் என்று தெரியவந்திருக்கிறது. இதுபற்றி ஆர்யா கூறும்போது, இதுவொரு ஜாலியான ஷூட்டிங். அமலா பாலுக்கு தாலிகட்டி திருமணம் செய்வதுபோல் 2வது முறையாக நடிக்கிறேன் என்றார். 

No comments:

Powered by Blogger.