Header Ads

டியூஷன் செல்லும் மாணவிகளே உஷார் : செல்போனில் படம் பிடித்த ஆசிரியையின் கணவர் கைது

தாம்பரம் அடுத்த முடிச்சூர் லட்சுமி நகர் பொன்னியம்மன் ஆதிலட்சுமி தெருவை சேர்ந்தவர் சங்கர் (35). கார்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஆர்த்தி (30). பட்டதாரி. இவர், வீட்டில் இருந்தபடி டியூஷன் நடத்தி வருகிறார். இந்த பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள், இவரிடம் டியூஷன் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை மாணவ, மாணவிகள் டியூஷன் படிக்க வந்தனர். அப்போது, சகோதரிகளான 2 மாணவிகள் கழிப்பறை சென்றுள்ளனர். அங்கு ஒரு செல்போன் இருந்தது. அதை எடுத்து பார்த்தபோது, வீடியோ ரிகார்டிங் செய்யப்பட்டு இருப்பதை பார்த்தனர். உடனே அதை கொண்டு வந்து, ஆர்த்தியிடம் கொடுத்தனர். அதை பார்த்த ஆர்த்தி, அதில் இருந்த காட்சிகளை அழித்தார். பின்னர், இந்த செல்போன் என்னிடம் இருக்கட்டும் என கூறி, மாணவிகளை வீட்டுக்கு அனுப்பினார்.

வீட்டுக்கு சென்ற மாணவிகள், டியூஷன் படிக்க சென்ற வீட்டின் கழிப்பறையில் செல்போன் இருந்ததையும், அந்த செல்போனில் இருந்த காட்சிகளை ஆர்த்தி அழித்ததையும் பெற்றோரிடம் கூறினர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், பீர்க்கன்காரணை போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, அந்த செல்போன் சங்கருக்கு சொந்தமானது என தெரிந்தது. இதையடுத்து சங்கரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். அதில், தினமும் மனைவி டியூஷன் நடத்தும்போது, கழிப்பறையில் வீடியோ ரிக்கார்டிங்கில் செல்போனை சங்கர் வைத்துவிடுவார். மாணவிகள் வீட்டுக்கு சென்றவுடன், அதனை லேப்டாப்பில் பார்த்து ரசிப்பார். நேற்றும் இதுபோல் செய்துள்ளார். செல்போனை மாணவிகள், ஆர்த்தியிடம் கொடுத்து விட்டனர். இதை பார்த்த ஆர்த்திக்கும், சங்கருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் போலீசார் அவரை பிடித்தனர் என கூறியுள்ளார். இதையடுத்து சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

No comments:

Powered by Blogger.