Header Ads

இந்திய பெருங்கடலில் மிதப்பது மலேசிய விமானமா?

பாங்காக் : மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சீனத் தலைநகர் பீஜிங்குக்கு 239 பேருடன் கடந்த 8ம் தேதி புறப்பட்ட விமானம், நடுவானில் மாயமானது. இந்த விமானம் தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்து மூழ்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.பிரான்ஸ் செயற்கைகோள் எடுத்த படத்தை ஆய்வு செய்த மலேசிய குழுவினர் தெற்கு ஆசிய பகுதியில் 122 பொருட்கள் மிதப்பதை கண்டு பிடித்தனர். இது மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தாய்லாந்து நாட்டின் ‘தாய்சோட்’ என்ற செயற்கை கோள் தெற்கு இந்தியப் பெருங்கடலில் 300 பொருட்கள் அருகருகே மிதக்கும் இடத்தை படம்பிடித்து அனுப்பியுள்ளது. இவை மலேசிய விமானத்தின் பாகங்களாக என ஆராயப்பட்டு வருகிறது.

No comments:

Powered by Blogger.