Header Ads

அருப்புக்கோட்டையைச்சேர்ந்த 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை ஏமாற்றி கற்பழித்த வாலிபர் கைது

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மீனாட்சி நகரைச் சேர்ந்தவள், ராதா (வயது 13, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவளுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஐ.டி.ஐ. படிக்கும் ஒரு மாணவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதால், சிறுமி ராதாவை காதலன் ஏமாற்றி கற்பழித்து விட்டான். இதில் சிறுமி கர்ப்பமானாள். நாட்கள் செல்ல, செல்ல ராதாவின் வயிறு பெரிதாகியது.
இதை அறிந்த பெற்றோர், நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர். அப்போது சிறுமி தனக்கு ஏற்பட்ட பழக்கம் குறித்து கூறினாள். இதைத் தொடர்ந்து சிறுமி ராதாவின் பெற்றோர், அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி, சிறுமியை ஏமாற்றிய வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சிறுமி ராதா, கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு அவளுக்கு நேற்று காலை 4.30 மணிக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. குழந்தையும், தாயும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த பெற்றோர் மிகவும் வருத்தம் அடைந்தனர்.

No comments:

Powered by Blogger.