Header Ads

மதுரை அருகே சப்-இன்ஸ்பெக்டருக்கு சரமாரி வெட்டு

மதுரை நரிமேடு பகுதியில் வசித்து வருபவர் மோகன். இவர் நாகமலை புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

வடிவேல்கரை பகுதியில் ஆதி தமிழர் பேரவை கூட்டம் நடப்பதை தொடர்ந்து அவர் நேற்றிரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிலர் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த மோகன் அவர்களை எச்சரித்து அனுப்பினார். இந்த நிலையில் திரும்பி சென்ற 3 பேர் சிறிது நேரம் கழித்து வந்து சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் மோகனிடம் தகராறில் ஈடுபட்டனர். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த கும்பல் மோகனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. கழுத்து தோள்பட்டை ஆகிய இடங்களில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரு கிறார்கள்.

இச்சம்பவம் குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த பிரபு, செந்தில் ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Powered by Blogger.