Header Ads

மாமியாருடன் ஐஸ்வர்யா மோதல் முற்றுகிறது

ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மாமியார் ஜெயா பச்சனுக்கும் மோதல் வலுக்கிறது. அமிதாப்பச்சன், ஜெயா பச்சன் தம்பதியின் மகன் அபிஷேக் பச்சனை ஐஸ்வர்யா ராய் மணந்தார். திருமணத்துக்கு பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்த ஐஸ்வர்யாராய் குழந்தையை வளர்க்கவே நடிப்பிலிருந்து விலகி இருப்பதாக கூறினார். ஆனாலும் விளம்பர படங்களில் மட்டும் தொடர்ந்து நடித்து வந்தார். ஆரம்பகாலத்தில் மாமியார் ஜெயா பச்சனும், மருமகள் ஐஸ்வர்யாராயும் கருத்துவேறுபாடு இல்லாமல் பழகினார்கள். பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது சேர்ந்தே சென்றார்கள். சமீபகாலமாக இருவருக்குள் மனக்கசப்பு ஏற்பட்டிருப்பதாக மும்பை பத்திரிகைகளில் தகவல் வெளியாகி வருகிறது. ஐஸ்வர்யாராய் மீண்டும் நடிப்பதற்கு ஜெயா பச்சன் எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிகிறது. மேலும் அவரது அன்றாட நிகழ்ச்சி விவரங்களையும் தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என்று ஜெயா கூறி வந்தார். இது ஐஸ்வர்யாவுக்கு பிடிக்கவில்லை. சொந்த விஷயங்களில் அவர் தலையிடுவதாக நினைத்தார். 

இதை தவிர்க்கும் விதமாக அபிஷேக் பச்சனுடன் தனிக்குடித்தனம் செல்ல ஐஸ்வர்யா ராய் எண்ணினார். அதற்கு ஜெயா பச்சன் அனுமதிக்கவில்லை. சில மாதங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க ஜெயா பச்சனும், ஐஸ்வர்யாராயும் சென்றனர். அப்போது போட்டோகிராபர்கள் ஐஸ்வர்யாராயை படம் பிடிக்க போட்டி போட்டதுடன் ஐஸ்வர்யா, ஐஸ்வர்யா என்று பேர் சொல்லி அழைத்து போஸ் கொடுக்க கேட்டனர். இதைகண்ட ஜெயா பச்சன், அவர் என்ன உங்க கிளாஸ்மேட்டா? எப்படி பேர் சொல்லி அழைக்கலாம் என்று சத்தம்போட்டார். 

இந்நிலையில் 2 தினங்களுக்கு முன் மும்பையில் நடந்த தொழில் அதிபர் இல்ல விழா ஒன்றில் ஜெயா பச்சன், அபிஷேக், ஐஸ்வர்யாராய்  பங்கேற்றனர். முன்னதாக விழாவுக்கு ஜெயா தனியாகவே வந்தார். விழாவில் அபிஷேக்குடனே ஐஸ்வர்யா நின்றிருந்தார். ஜெயாவை அவரோ, ஐஸ்வர்யாவை ஜெயாவோ முகம் கொடுத்து பார்க்கவில்லை. இதை கவனித்தவர்கள் இருவரின் மோதல் குறித்து முணுமுணுத்தனர்.

No comments:

Powered by Blogger.