Header Ads

10 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் இல்லத்தை காலி செய்ய தயாராகும் மன்மோகன் சிங்

பிரதமரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர். மன்மோகன் சிங், தற்போது டெல்லியின் ரேஸ் கோர்ஸ் சாலையிலுள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் வசித்து வருகிறார். வரும் நாடாளுமன்ற தோ்தலுக்குப் பிறகு ஓய்வு பெறவுள்ள பிரதமர் மன்மோகன் சிங், தற்போது குடியிருக்கும் பிரதமர் இல்லத்தை காலி செய்துவிட்டு, மோதிலால் நேரு பிளேஸ் பங்களாவுக்கு குடியேற தயாராகி வருகிறார். 

நான்கு படுக்கைகள் கொண்ட இந்த மிகப்பெரிய பங்களாவை சமீபத்தில் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் காலி செய்தார். அதன்பின்னர் மன்மோகன் சிங் குடியேற உள்ளதால், அங்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பங்களா மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவிக்கு வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.