Header Ads

உலகின் முதல் மொழி தமிழ்: அமெரிக்க ஆய்வாளர் அலெக்ஸ் கல்லியர் பரபரப்புத் தகவல்

தமிழின் சிறப்பை தமிழர் மறந்து வரும் நிலையில் “உலகின் மூத்த வலிமையான மொழி தமிழ்” என்ற உண்மையை அமெரிக்க ஆய்வாளர் அலெக்ஸ் கல்லியர் கண்டறிந்து எடுத்துக் கூறி வருகின்றார். தமிழின் சிறப்பை இனி கடல்கள் கடந்தும் உலகம் எங்கும் போற்றுவார்கள்! தமிழர் நாமும் எம் அன்னை மொழியை போற்றி பாதுகாத்து பேசி மகிழ்வோம்.
நீங்களும் நானும்தான் தமிழ், தமிழ், என்று சொல்லிக்கொண்டிருகவேண்டும், இந்தியாவில் தமிழ்க்கு வேலையில் முன்னுரிமை இருந்ததால் .ஏன் அயல்மொழியெய் கற்க பள்ளிக்கு அனுப்பப்போகிறார்கள் பெற்றோர்கள். (Selva Mani)
ஆங்கிலம் படித்த அத்தனை பேரும் வேலைவாங்கிவிடவில்லை. தாய்மொழியில் படித்த அத்தனை பேரும் வேலையில்லாமலும் இல்லை. படிப்பு அறிவு வளர்ச்சிக்கும் திறமையை வளாத்துக் கொள்வ தற்கும் தான். வேலை வேலை என்று நாம் எதைக் குறிப்பிடுகிறோம். அலுவலகத்தில் பணிபுரிவதையா? திறமையுள்ளவன் வேலை தேட மாட்டான் தொழில் முனைவான். படித்தவன் அவனிடம் வேலை செய்வான். ஆங்கிலம் அறிவன்று! அது ஒரு மொழி மட்டுமே! மொழி அறிவு வளர்ச்சிக்கான ஒரு கருவி மட்டுமே! பிறரோடு தகவல் பரிமாறும் ஒரு ஊடகம்! சீனாக்காரனும் ஜப்பான் காரனும் தாய்மொழியில் படித்து முன்னேறும் போது தமிழனால் ஏன்முடியாது? மாயையை விட்டு விலகுவோம்.

No comments:

Powered by Blogger.