நிர்வாண காட்சியில் திரிசா -கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
நிர்வாண காட்சியில் திரிசா -கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
திரிசா
நடிகை திரிஷா ஓட்டல் அறை ஒன்றில் குளிப்பது போன்ற காட்சியொன்று 2004–ல் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பாத்ரூமில் ரகசிய கேமராவை பொருத்தி இக்காட்சியை படமாக்கியதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தை வார பத்திரிகையொன்றும் வெளியிட்டது.
ஆனால் திரிஷாவும், அவரது தாய் உமாவும் இதனை மறுத்தனர். படத்தில் இருப்பது திரிஷா இல்லை என்றும் மார்பிங்கில் போலியாக இப்படத்தை உருவாக்கி இருப்பதாகவும் கூறப்பட்டது. படத்தை வெளியிட்ட வார பத்திரிகையிடம் நஷ்டஈடு கேட்டு உமாகிருஷ்ணன் எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வந்தது. விசாரணைக்கு வருமாறு உமாகிருஷ்ணனுக்கு கோர்ட்டு பல தடவை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.
இதையடுத்து நீதிபதி கோபாலகிருஷ்ணன் திரிஷாவுக்கும், உமாகிருஷ்ணனுக்கும் கைது வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டதாக செய்திகள் வெளியானது.
இதனை உமாகிருஷ்ணன் வக்கீல் மறுத்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ‘‘கோர்ட்டு திரிஷாவுக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கவில்லை. அவரது தாய் உமாகிருஷ்ணனுக்கு மட்டுமே வாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கு சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.
No comments: