Header Ads

பொலிசாரை பாடாய்படுத்தும் ராதா: ஐதராபாத்துக்கு ஓட்டம்

நடிகை ராதா புகாரை கொடுத்துவிட்டு ஐதராபாத்திற்கு தப்பியோடியதால் பொலிசார் திணறிவருகின்றனர்.
நடிகை ராதா கடந்த மாதம் திடீரென்று கமிஷனர் அலுவலகம் வந்து ஒரு புகார் கொடுத்தார்.

அதில், திருவல்லிக்கேனியைச் சேர்ந்த பைசூல் என்பவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி 4 வருடம் குடும்பம் நடத்தினார். 50 லட்சம் ரூபாய் பணத்தையும் ஏமாற்றி வாங்கி விட்டார் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு வடபழனி பொலிசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். அவர்களும் வழக்கு பதிவு செய்து பைசூலை தேடி வந்தனர்.இந்நிலையில் மீண்டும் கமிஷனர் அலுவலகம் வந்த ராதா பொலிசார் பைசூலுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்றும், அவரை கைது செய்யாமல் ஏமாற்றுவதாகவும் புகார் கூறினார்.

அதன் பிறகு திடீரென்று வடபழனி காவல் நிலையம் சென்றவர். ஆயிரம் இருந்தாலும் பைசூல் என் கணவர் என்று கூறி புகாரை வாபஸ் பெற்றார்.

அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் கமிஷனர் அலுவலகம் வந்து பைசூல் மீது மீண்டும் புகார் கொடுத்தார். ராதாவுக்கும், பைசூலுக்கும் இடையில் என்னதான் பிரச்னை என்று தெரியாமல் பொலிசார் தவிக்கிறார்கள். இருவரையும் ஒரே நேரத்தில் அழைத்து விசாரித்தால்தான் உண்மை தெரியும் என்று அதற்காக முயற்சி செய்தனர்.

இந்நிலையில் பைசூல் மீது மீண்டும் புகார் கொடுத்த ராதா யாருக்கும் தெரியாமல் ஐதராபாத்துக்கு சென்று விட்டார். அங்கு ஒரு முக்கிய புள்ளியின் பாதுகாப்பில் இருக்கிறார் என்றும், உறவினர்கள் பாதுகாப்பில் இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பைசூல் ஆட்களின் கொலை மிரட்டலுக்கு பயந்தே அவர் பாதுகாப்பு தேடிச் சென்று விட்டதாகவும் கூறுகிறார்கள்.

மேலும் பைசூல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இருவரும் சென்னையில் இல்லாததால், யாரிடம் விசாரிப்பது என்ற குழப்பத்தில் பொலிசார் உள்ளனர்.

No comments:

Powered by Blogger.