Header Ads

திருவனந்தபுரம் அருகே விஷம் கொடுத்து மகளை கொன்று கணவன்–மனைவி தற்கொலை

திருவனந்தபுரம் அருகே களக்கூட்டத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 54). தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி வீணா (42). இந்த தம்பதியின் மகள் நீது (17) மாற்று திறனாளி.

கடந்த 6 மாதத்திற்கு முன்பு ராதாகிருஷ்ணன் வேலை பார்க்கும் பஸ் கம்பெனியை சேர்ந்த ஒரு டிரைவர் சங்குமுகம் பகுதியில் பஸ் ஓட்டி சென்றபோது தனியார் கட்டிடம் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் அந்த கட்டிடம் சேதம் அடைந்தது. விபத்து பற்றி கேள்விப்பட்டதும் ராதாகிருஷ்ணன் உள்பட சில டிரைவர்கள், ஊழியர்கள் அங்கு சென்று அந்த கட்டிட உரிமையாளரிடம் சமரச பேச்சு நடத்தினார்கள்.

பழுதடைந்த கட்டிடம் சீரமைத்து தரப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர். ஆனால் கட்டிடத்தை சீரமைக்க பஸ் கம்பெனி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ராதாகிருஷ்ணன் உள்பட சில டிரைவர்கள் பணம் வசூல் செய்து அந்த கட்டிடத்தை சீரமைக்க திட்டமிட்டனர்.

ஆனால் கட்டிட உரிமையாளர் அதிக பணம் கேட்டதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கட்டிட உரிமையாளருக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் கைகலப்பும் ஏற்பட்டு உள்ளது. இதனால் ராதாகிருஷ்ணன் பற்றி அந்த கட்டிட உரிமையாளர் களக்கூட்டம் போலீசில் புகார் செய்தார்.

இதைத் தொடர்ந்து போலீசார் ராதாகிருஷ்ணனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினார்கள். அவரது உறவினர்கள் சிலர் ஜாமீன் வழங்கி ராதாகிருஷ்ணனை வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

ஆனாலும் ராதாகிருஷ்ணன் போலீஸ் விசாரணையை நினைத்து மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் அவர் தனது மகள் நீதுவுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு மனைவியுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தகவல் கிடைத்ததும் களக்கூட்டம் போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

No comments:

Powered by Blogger.