Header Ads

பாகிஸ்தானில் பஞ்சாயத்து உத்தரவுப்படி விதவை பெண்ணை 4 பேர் கற்பழித்த கொடூரம்

பாகிஸ்தானில் பஞ்சாயத்து உத்தரவுப்படி இளம் விதவை பெண் 4 பேரால் கற்பழிக்கப்பட்டார்.

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முசாபர்கர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபர் பக்கத்து வீட்டு பெண்ணை காதலித்தார். இது வெளியே தெரிந்தவுடன் அந்த கிராமத்தில் கட்டப்பஞ்சாயத்து நடந்தது.

இறுதியில் அந்த வாலிபர் பக்கத்து வீட்டு பெண்ணை காதலிப்பது குற்றம் என தீர்ப்பளிக்கப்பட்டது.

அதற்கு தண்டனையாக வாலிபரின் இளம் விதவை தங்கையை 4 பேர் கற்பழிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அந்த கிராமத்தை சேர்ந்த 4 பேர் கும்பல் கொடூரமாக கற்பழித்தது.

இந்த காட்டுமிராண்டி தனம் குறித்து அப்பெண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Powered by Blogger.