Header Ads

25-வது குழந்தையை தத்தெடுத்த ஹன்சிகா

நடிகைகள் சமூக சேவைகளில் ஆர்வம் காட்டுகின்றனர். நமீதா ஏழைகளுக்கு உதவிகள் செய்கிறார். பெண்களுக்கு பொது இடங்களில் சொந்த செலவில் கழிப்பிடங்கள் கட்டி கொடுத்தார். திரிஷா பிராணிகள் நல பாதுகாப்பு அமைப்பில் சேர்ந்து தெருவோர நாய்களை பிடித்து குளிப்பாட்டி சுத்தப்படுத்தி வளர்க்கிறார். அவற்றை தத்து கொடுக்கவும் செய்கிறார். 

பிறந்த நாட்களை ஆதரவற்ற குழந்தைகளுக்கு துணிமணிகள், பரிசு பொருட்கள் கொடுத்து கொண்டாடுகிறார். ஹன்சிகா ஆதரவற்ற குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். இதுவரை 24 குழந்தைகளை தத்து எடுத்து அவர்களின் முழு படிப்பு செலவையும் கவனித்து வருகிறார். இப்போது 25-வதாக புனேயில் 8–வது படிக்கும் சிறுவன் ஒருவனை தத்து எடுத்துள்ளார். அவன் பெற்றோர் சண்டை போட்டு பிரிந்து விட்டனர். 

தந்தையின் தங்கை பராமரிப்பில் அச்சிறுவன் வளர்ந்தான். தற்போது அப் பெண்ணை புற்று நோய் தாக்கியுள்ளது. இதனால் மாணவனால் படிப்பை தொடர முடியவில்லை.இந்த பரிதாப கதையை கேள்விவுற்ற ஹன்சிகா அந்த சிறுவனை படிக்க வைப்பதாக தத்து எடுத்துக் கொண்டார்.

No comments:

Powered by Blogger.