Header Ads

வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியத்தை கடைபிடிப்பேன். சன்னியாசியாக மாறிய நடிகை ரஞ்சிதா பேட்டி.

கடந்த 2010ஆம் ஆண்டு நித்தியானந்தா என்ற சாமியாருடன் படுக்கையறையில் இருந்ததாக பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா, நேற்று முன் தினம் நித்தியானந்தா ஆசிரமத்தில் சன்னியாசினியாக தீட்சை பெற்று தனது பெயரை "மா ஆனந்தமயி" என்று மாற்றிக்கொண்டார்

பெங்களூரில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் தங்கிவரும் நடிகை ரஞ்சிதா, நித்தியானந்தாவின் 37வது பிறந்தநாள் விழா நடந்தபோத் சன்னியாசியாக மாறுவதாக அறிவித்தார். அவருக்கு நித்தியானந்தா தீட்சை கொடுத்து அவரது பெயரை "மா ஆனந்தமயி" என்று மாற்றினார்.

பின்னர் ரஞ்சிதாவுக்கு ருத்ராட்சை மாலையும், காவி உடையும் கொடுக்கப்பட்டது. அவற்றை அணிந்து வந்த ரஞ்சிதா, செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் "இனி தனக்கென்ற தனிப்பட்ட வாழ்க்கை எதுவும் இல்லை என்றும், இனி தன் வாழ்நாள் முழுவதையும் பிரம்மச்சாரியத்தை கடைபிடிக்க போவதாகவும் கூறினார். மேலும், இனிமேல் தனக்கு ஆசிரமம் மட்டுமே கதி என்றும், உண்மை, அமைதி, அஹிம்சை ஆகியவற்றை கடைபிடித்து பொதுமக்களுக்கு ஆன்மீக ஞானத்தை வளர்க்க பாடுபடுவேன் என்றும் கூறினார்.

இதே ஆசிரமத்தில் நடிகை ராகசுதாவும் சன்னியாசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.