Header Ads

நடிகர் பிரேம்நசீர் ரசிகர் மன்றம் சார்பில் நடிகை ஷோபனாவுக்கு விருது

பழம்பெரும் மலையாள நடிகர் பிரேம்நசீர் நினைவாக அவரது ரசிகர் மன்றம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. 2014–ம் ஆண்டுக்கான பிரேம்நசீர் விருது பிரபல நடிகை ஷோபனாவுக்கு வழங்கப்படுகிறது. 

வருகிற ஜனவரி மாதம் 22–ந்தேதி கேரள மாநிலம் சிறையின்கீழ் அருகே உள்ள சார்கரையில் நடக்கும் விழாவில் இந்த விருது வழங்கப்படுகிறது. நடிகை ஷோபனாவுக்கு தங்கப்பதக்கம், ரூ.50,001 ரொக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். ஜனவரி 22–ந்தேதி பிரேம்நசீரின் பிறந்தநாள் ஆகும். இதையொட்டி அவரது பிறந்தநாள் விழாவும், விருது வழங்கும் விழாவும் கோலா கலமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பிரேம்நசீர் ரசிகர் மன்ற செயலாளர் சுபாஷ், ஒருங்கிணைப்பாளர் அனீஷ்லால் ஆகியோர் செய்து வருகிறார்கள். 

இதுபோல பிரபல மலையாள நடிகர் மதுவுக்கு குருவாயூர் தேவசம் போர்டு சங்கீத சங்கம் சார்பில் சிறந்த கலைஞருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1–ந்தேதி குருவாயூர் ருக்மணி தியேட்டரில் நடைபெறும் விழாவில் நடிகர் மதுவுக்கு தங்கப்பதக்கம், ரூ.10,001 ரொக்கமும் வழங்கப்படும் என்று குருவாயூர் தேவசம் போர்டு தலைவர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார். 

மேலும் பிரபல எழுத்தாளர் வாசுதேவ நாயருக்கும் தேவசம் போர்டு விருது வழங்கப்படுகிறது.

No comments:

Powered by Blogger.