Header Ads

தாயின் கள்ளக்காதலால் மகள் கர்ப்பம்....

அர்ஜெண்டினாவில் தாயின் கள்ளக்காதலன் கற்பழித்ததால் 14 வயது சிறுமி கற்பமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அர்ஜண்டினாவின் சால்டோ என்ற நகரில் நடுத்தர வயது பெண் ஒருவர் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு கள்ளக்காதலனுடன் வாழ்ந்து வந்தார். தனக்கும், தன் முந்நாள் கணவருக்கும் பிறந்த 14 வயது மகளையும் வளர்த்து வந்தார்.

இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று இச்சிறுமியின் தாய் வெளியில் சென்றிருந்த நேரத்தில் குடிபோதையில் வீடு புகுந்த அவளின் கள்ளக்காதலன் நிலை தடுமாறி தனிமையிலிருந்த 14 வயது சிறுமியை கற்பளித்துள்ளான்.

தற்போது 9 வார கருவை வயிற்றில் சுமந்திருக்கும் தன் மகளுக்கு கருக்கலைப்பு செய்வதற்காக அச்சிறுமியின் தாயார் மருத்துவமனையை நாடியுள்ளார்.

ஆனால் சால்டோ நகரில் கருக்கலைப்பு செய்வது குற்றமாகும், எனவே இதனை மறுத்த மருத்துவர் நீதிமன்றம் அனுமதியளித்தால் தாங்கள் கருக்கலைப்பு செய்வதாக தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அப்பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையில் கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் கடந்த வருடம் கருக்கலைப்பு செய்வது குற்றமான செயல் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது.

மேலும் அர்ஜெண்டினாவில் இதுபோன்ற வழக்குகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்றாலும் ஒரு சில சூழ்நிலைகளில் கருக்கலைப்பிற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.