Header Ads

விடுதலைப்புலி ஆதரவாளர்களின் கோரிக்கையிலேயே நவநீதம்பிள்ளையின் விஜயம்!- கோத்தபாய

2009ம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்காக வெளிநாடுகளில் பிரசாரம் செய்யும் பிரிவினரின் கோரிக்கையின் பேரிலேயே நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் இடம்பெற்றது என்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டில் போர் முடிவடைந்துள்ள போதும் பயங்கரவாதத்தை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகள் தொடர்வதாக அவர் குறிப்பிடடுள்ளார்.
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே சர்வதேசத்தில் இலங்கை மீது அழுத்தத்தை அதிகரிக்கின்றனர்.
போரின் பின்னர் இலங்கை எதிர்நோக்கும் சவால்கள் என்ற தலைப்பில் இன்று கொழும்பில் உரையாற்றும் போதே கோட்டாபய இந்தக்கருத்துக்களை வெளியிட்டார்.
இலங்கையி;ன் உள்நாட்டு விவகாரம், சர்வதேச நாடுகளுக்கும் ஐககிய நாடுகளுக்கும் அட்டவணைகளாக மாறியுள்ளன என்றும் கோட்டாபய குறிப்பிட்டார்.

No comments:

Powered by Blogger.